Tag: #ISRO

ஆக்சிஜன் லீக்.., இந்தியரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு.!

 ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள், LOx கசிவை சரிசெய்யும் வகையில், Ax-4 பணிக்காக நாளை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் விண்வெளி தூரம் கிடைப்பதைப் பொறுத்து புதிய ஏவுதள தேதி பகிரப்படும் என்றும் […]

#ISRO 6 Min Read
AX4 - NASA

விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா! கொண்டு செல்லும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை  செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]

#ISRO 5 Min Read
Shubhanshu Shukla FOOD

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு.! மீண்டும் எப்போது?

டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது.  இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை […]

#ISRO 6 Min Read
axiom-4 mission

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தனது 101-வது விண்வெளி பயணமாக பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 5:59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-09, சூரிய ஒத்திசைவு துருவ புவி […]

#ISRO 3 Min Read
ISRO -PSLV

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat- 1B) எனும் செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி-சி61 (PSLV-C61) ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இன்று அதிகாலை 5.59 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் 101வது ராக்கெட் ஆகும், இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு பிரியும் பொழுது எந்தவித கோளாறும் இல்லாமல் சென்ற நிலையில், ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் […]

#ISRO 3 Min Read
PSLVC61

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவவுள்ளது. இந்த ஏவுகணை வாகனம் பூமியின் பெரும்பாலான மேற்பரப்பை ஆராய்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், ”வரவிருக்கும் PSLV-C61 ஏவுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பூமியில் உள்ள பல்வேறு […]

#ISRO 6 Min Read
EOS09 - ISRO

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு எல்லையில் முழுமையான அமைதி நிலவியதாகவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் எதுவும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இஸ்ரோ தலைவரின் இவ்வாறு கூறியிருக்கிறார். இது தொடர்பாக, நேற்றைய தினம் […]

#ISRO 4 Min Read
India Pakistan war - ISRO Satellite

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய விண்வெளித்துறையின் வளர்ச்சி பற்றிய பல்வேறு தகவல்களை கூறினார். இந்திய விண்வெளி துரையின் சாதனைகள் குறித்தும் விவரித்தார். அந்த வீடீயோவில் பேசியிருந்த பிரதமர் மோடி, விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. அது ஒரு ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பலன். இந்திய விண்வெளிப் பயணம் இந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை […]

#Delhi 4 Min Read
PM Modi

சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?

கலிபோர்னியா : பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸூம், வில்மோரும் விரைவில் வீடு திரும்ப போகின்றனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு புதிய குழுவினரை அனுப்பியது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அங்கு சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்புவதற்கு போராடி வருகின்றனர் நாசா […]

#ISRO 8 Min Read
Stranded Astronauts Face Painful Return

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை! ஜெட் வேகத்தில் வேலையை தொடங்கிய இஸ்ரோ…

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்ககும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இந்த ஏவுதளத்தின் பணிகள் இரண்டாண்டுகளில் முடிவடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இதற்கான வேலைகள் குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதி, கிழக்கு கடற்கரை அருகில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த இடம் தான் ராக்கெட் ஏவுதளத்திற்கான சிறந்த இடம் என்பதால், இந்தப் பகுதியில் ஏவுதளம் அமைக்க தமிழக […]

#ISRO 4 Min Read
Kulasekarapattinam Space port

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில் தனது 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. கடந்த 29ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தற்பொழுது, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, இதன் காரணமாக முழு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது […]

#Andhra 4 Min Read
isro 100th rocket

LIVE : தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் கைது முதல்…இஸ்ரோவின் 100வது ராக்கெட் வரை!

சென்னை : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் அவர்களை கைது செய்துள்ளது. இலங்கை காங்கேசன் கடற்பரப்பில் படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள், விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – […]

#Andhra 2 Min Read
tamil nadu fishermen live

இஸ்ரோவின் 100வது ராக்கெட் : விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடக்கம்!

ஆந்திரப்பிரதேசம் :  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை நாளை, ஜனவரி 29, 2025 அன்று காலை 6:23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட் NVS-02 எனப்படும் இரண்டாம் தலைமுறை நவிகேஷன் செயற்கைக்கோளை (NavIC) சுமந்து செல்கிறது. கவுண்டவுன் தொடக்கம்  நாளை GSLV F15 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான […]

#Andhra 6 Min Read
isro 100th launch

சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை மறுநாள் (29ம் தேதி) விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில் NVS-2 என்ற […]

#Andhra 5 Min Read
GSLV-F15 -ISRO

ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா. ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் படிப்படிப்பாயாக அதன் தூரங்கள் குறைக்கப்பட்டு, இடையில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டாலும், இஸ்ரோ தனது […]

#ISRO 4 Min Read
SpaDex Docking - PM Modi

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் செயல்முறையின் முன்னோடியாக பார்க்கப்பட்டும் இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி எனும் 4000 கிலோ […]

#ISRO 5 Min Read
Space Docking Experiment - ISRO

2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு… கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!

டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி PSLV C-60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் A, ஸ்பேடெக்ஸ் B ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இப்போது, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்களுக்கு இடையேயான இடைவெளியை குறைத்தும், அதிகரித்தும் இஸ்ரோ சோதித்து வருகிறது. […]

#ISRO 4 Min Read
SPADEX - ISRO

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 […]

#ISRO 3 Min Read
Space docking

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் […]

#ISRO 6 Min Read
isro narayanan

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஸ்பேடெக்ஸ் ஏ (SpaDex A) மற்றும் ஸ்பேடெக்ஸ் பி (SpaDex  B) ஆகிய 400 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து சென்றது. விண்ணில் 700 கிமீ தொலைவில் இரண்டு […]

#ISRO 3 Min Read
SpaDex A and B - ISRO