Tag: #Arrest

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி நகர வடக்கு காவல்துறை அதிகாரிகளால் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மெடிக்கல் […]

#Arrest 2 Min Read
Tom Chacko

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். போதைப் பொருள் குறித்த சோதனையின் போது தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரித்த நிலையில், குற்றம் […]

#Arrest 4 Min Read
Shine Tom Chacko

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் பகுதியில் உள்ள குருநாதன் கோவில் விளக்கு அருகே நடந்துள்ளது. ஒரு இளைஞர் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து […]

#Arrest 3 Min Read
murder

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் […]

#Arrest 2 Min Read
tamil live news

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் மட்டும் 930-க்கும் மேற்பட்ட இத்தகைய புகாரில் சிக்கியிருந்தார்கள். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே என்பதும் தெரிய வந்தது. இது போன்ற மோசடியில் வயதானவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தது வருகிறது. இந்த சூழலில் மும்பையை சேர்ந்த 86 வயது முதிய பெண் […]

#Arrest 7 Min Read
digital scams old women

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கண்டனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக அரசு வாங்கும் கடன்களை மூலதனங்களில் […]

#Annamalai 6 Min Read
Senthil Balaji annamalai

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ரவுடிகள் அருண் குமார் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், […]

#Arrest 4 Min Read
Murder Arrest

டாஸ்மாக் விவகாரம் : அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து நேற்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், இந்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பாஜக […]

#Annamalai 3 Min Read
ANNAMALAI

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக கண்டனங்களை தெரிவித்து இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பலரையும் காவல்துறை காலையிலே அதிரடியாக கைது செய்தது. பாஜக […]

#Annamalai 7 Min Read
annamalai tamilisai soundararajan

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என தெரியவந்ததாகவும் வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக வெடித்துள்ளது. இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி பாஜகவை விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார். இது […]

#Annamalai 6 Min Read
narendra modi s. regupathy

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலே […]

#Annamalai 4 Min Read
Annamalai - BJP-Tasmac

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி தவெகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் […]

#Arrest 6 Min Read
TVKVijay - TN govt

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் […]

#Arrest 5 Min Read
Tvk executives arrested

தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா […]

#Arrest 5 Min Read
ranya rao gold smuggling

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]

#Arrest 6 Min Read
Seeman - Police

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]

#Arrest 5 Min Read
NTK - Vijayalakshmi

விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் […]

#Arrest 7 Min Read
Seeman House

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது, கடந்த 20-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களும், கடந்த 9-ஆம் தேதி 19 பேரை […]

#Arrest 5 Min Read
Chief Minister Stalin - Ministry of External Affairs

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]

#Arrest 4 Min Read
stalin - fisheries tn

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து வரும் 4 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் தான் பேரதிர்ச்சியாக எழுந்துள்ளது. அந்த மாணவி மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த போது அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல்  தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பள்ளி முடிந்த பிறகு மாலை வீட்டிற்கு சென்ற […]

#Arrest 7 Min Read
Girl sexually harassed