ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர். 3-வது வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சிவசங்கா் பாபாவிற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் போக்சோ வழக்கில் சிறையில் இருந்த சிவசங்கா் பாபா நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில்,2-வது வழக்கில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…