[Representative Image]
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதற்கும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிலிண்டர் விலை குறைப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்து, விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது, கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,118 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்தியது பாஜக அரசு, தற்போது ரூ.200 குறைத்துள்ளது.
5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்தது வந்தது.
சமையல் சிலிண்டர் விலையை குறைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200 வரை உயர்த்திவிட்டு, தற்போது விலை குறைப்பதாக நாடகமாடுகிறது மத்திய பாஜக அரசு என்றுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…