MInister Mano Thangaraj [Image source : EPS]
தமிழகத்தில் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 30.80 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆவின் தொடர்பாக பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பேசினார். அவர் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பால் கொள்முதல் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு பேசினார் .
அதில், ஏப்ரல் மாதம் கணக்கீட்டின் படி, ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 27.08 லட்சம் லிட்டராக இருந்தது. இந்த பால் கொள்முதல் மே மாத கணக்கீட்டின் படி 30.80 லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சென்னையில் மட்டும் 80 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விரைவான தார சான்று விலை நிர்ணயம் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்கு கொள்முதல் நடைபெறுகிறதோ அங்கேயே பால் தரம் பார்க்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். மிக விரைவில் ஆவின் சிறந்த நிறுவனமாக வளரும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டு பேசினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…