மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்…!

Published by
லீனா

மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்.

மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோயிலில் பட்டியலினத்தை சேர்ந்த ஒரு நபர் பூசாரியாக உள்ளார். ஆனால் அந்த கோவிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அந்த கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேசமயம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து அரசியலமைப்பு சட்டத்தின் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும், நாட்டில் உள்ள எல்லா கோயில்களிலும் அனைவரும் நுழைய அனுமதி உண்டு என்பதை கிராம மக்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது கோவில் பூசாரியான சின்னசாமிக்கு திடீரென்று அருள் வந்து அவர், ‘காலம் காலமாக இருக்கும் வழிமுறையை மீறி கோவிலுக்கு வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து கோவிலுக்குள் செல்வர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் முதன் முறையாக நுழைந்தனர். இதன்மூலம் கோவில் போன்ற பொது இடங்களில் தலித் மக்கள் நுழையக்கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் தகர்தெறியப்பட்டது.

Published by
லீனா
Tags: #Templetalit

Recent Posts

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…

3 minutes ago

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…

24 minutes ago

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

1 hour ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

2 hours ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

2 hours ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

2 hours ago