சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பட்டு அறை..!

Published by
லீனா

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும் சென்னையிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையிலான மோதல்களால், உயிரிழப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பொது இடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அதிலும், சூடானின் தலைநகரான கார்டூம் நகரின் வடக்கே அமைந்துள்ள பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது, அங்கு ஏற்பட்ட வான்வழி தாக்குதலால் பல வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பல முக்கிய சேவைகள் இடிந்து விழுந்துள்ளது.

சூடான் தாக்குதல்

Sudan CASE
Sudan CASE [Image Source : Google]

முன்னதாக சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும் சென்னையிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறைக்கு 011-24193100, 9289516711, tnhouse@nic.in-ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 9600023645,nrtchennai@gmail.com-யை தொடர்பு கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

8 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

8 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

9 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

9 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

12 hours ago