Dengue : அதிகாரிகள் வாரத்தில் 2 முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.! டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருவது போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது. தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. இதனால் காய்ச்சலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது .

டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் அரசு மருத்துவர்கள், மருத்துவ உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 11,333 மருத்துவமனைகள் உள்ளன. அது போக புதியதாக 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை சேர்த்தால் தற்போது தமிழகத்தில் 11,833 மருத்துவமனைகள் உள்ளன. விரைவில் தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவமனைகள் 12 ஆயிரமாக மாறும்.

மருத்துவத்துறை அதிகாரிகள் , அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மருத்துவமனை சுற்றி நீர் எங்கும் தேங்கியுள்ளதா.? கொசு உற்பத்தி ஏதேனும் இருக்கிறதா என்பதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மழையானது மழைக்காலத்தில் மட்டும் தான் வரும் என்றில்லை. வெப்ப சலனம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருக்கிறது. அதனால் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

8 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

8 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

9 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

10 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

11 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

11 hours ago