காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
கடந்த 36 நாள்களில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு நாள்கள் கூட ஆகலாம் எனவே அதற்கேப்ப பக்தர்கள் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.பக்தர்களுக்காக மேற்கு கோபுர வாசல் அகலப்படுத்தவும் , 16- 17ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 16-ம் தேதி காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உள்ளுர் விடுமுறை எனவும் ,17 -ம் தேதி பிற்பகல் 12மணிக்கு கிழக்கு கோபுரவாசல் மூடப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்களுக்கு மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…