ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2.. என் மீதான வழக்கு நகைச்சுவையானது – அண்ணாமலை பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் திமுக சொத்து பட்டியல் என்று ஒரு விடியோவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது, மேலும், அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர்.

இந்த சமயத்தில், அண்மையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன்பின், இன்று, திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதுபோன்று, சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுகவினர் தொடர்ந்து வழக்கு தொடுத்து வருகின்றனர். இதனால் அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர். பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது.

வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்தி கொள்ள மாட்டேன்.  ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் இரண்டாவது (DMK Files Part 2) சொத்து பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்தார். இரண்டாவது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய அவர், தமிழக அரசு ஓராண்டில் 3 முறை ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது.

அதிகளவில் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பம் என்பதால் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியா?. நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பது பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? சிறப்பாக பணியாற்றிய பி.டி.ஆரின் இலாகாவை மாற்றியதற்கு ஆடியோ வெளியானது காரணமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago