திருச்சி திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… திமுக தலைமை அறிவிப்பு…உடன்பிறப்புகள் ஒத்துழைக்க அறிவுரை..

Published by
Kaliraj
  • திருச்சி மாவட்டங்களை வடக்கு, மத்தி, தெற்கு என 3 ஆக பிரித்து, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் தற்போது  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
  • அதற்கான புதிய மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தற்போது திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image result for திமுக திருச்சி மாவட்ட புதிய செயலாளர்கள் நியமனம்

இதனால் திருச்சி வடக்கு- திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு-திருச்சி மத்திய- திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக திருச்சி பிரிக்கப்படுகிறது. இந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களாக,

  • முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும்,
  • திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணியும்,
  • திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏவும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்குரிய  மாவட்ட நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இந்த  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

32 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 hour ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

2 hours ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

3 hours ago