வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் தங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழகத்தில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள வேட்பாளர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி, அம்பாசமுத்திர தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு ரூ.246.73 கோடி, சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் சொத்து மதிப்பு ரூ.211 கோடி, எம்கே மோகனின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.41 கோடி உயர்ந்துள்ளது.
இதையடுத்து கோவை தெற்கில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.176 கோடி,அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.161 கோடி இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற செல்வந்தர்களின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மறைந்த வசந்தகுமார் எம்பி ரூ.337 கோடி சொத்துக்கள் வைத்திருந்தார்.
மேலும் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எம்கே மோகன் ரூ.170 கோடி சொத்துக்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும்போது ரூ.113 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…