கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த, உலக அமைதி பல்கலைக்கழகம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது இவருக்கு வயது 33. இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். ஆட்டோ டிரைவராக உள்ள இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
தனது உழைப்பில் ஒரு பங்கை மரக்கன்றுகளை நடுவதற்கு செலவிடுகிறார். இவர் இதுவரை 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார். சாகுல் ஹமீது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்க மாநில தலைவராகவும் உள்ளார்.
இவரது இந்த செயலைப் பாராட்டி, உலக அமைதி பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தில், டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையை சாகுல் ஹமீது பெற்றுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…