கொரோனா அச்சம் காரணமாக தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பொதுஇடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
ஒருவருக்கு மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்துக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் கைகளை நன்றாக சுத்தம் செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…