இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

Published by
Rebekal

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அதிகப்படியான பில் கேட்டதாகவும், அதை கட்ட குடும்பத்தினரால் முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், எஸ்பிபி இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் கூட முழு பணத்தையும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்ட முடியாததால் அவரது உடலை கொடுக்காததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை கூட தர மறுத்ததாகவும் பின் குடியரசுத்தலைவரின் உதவியுடனே எஸ்பிபி சரண் அவர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள எஸ்பிபி சரண், கடந்த வெள்ளிக்கிழமை அப்பா காலமானார். இந்நிலையில் தற்போது பரவி வரக் கூடிய அனைத்து வதந்திக்கு ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டுமானால் அத்தனையும் பொய் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் தற்பொழுது நானும் மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கை வெளியிடப் போகிறோம், இவ்வாறு ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் எனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்த சிகிச்சைகளுக்கும். உதவிக்கும் என்றுமே அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என கூறியுள்ளார். நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு சென்று வந்தது போல கூட இல்லை குடும்பத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்தது போல தான் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

9 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

51 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago