இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

Published by
Rebekal

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அதிகப்படியான பில் கேட்டதாகவும், அதை கட்ட குடும்பத்தினரால் முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், எஸ்பிபி இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் கூட முழு பணத்தையும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கட்ட முடியாததால் அவரது உடலை கொடுக்காததால் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை கூட தர மறுத்ததாகவும் பின் குடியரசுத்தலைவரின் உதவியுடனே எஸ்பிபி சரண் அவர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள எஸ்பிபி சரண், கடந்த வெள்ளிக்கிழமை அப்பா காலமானார். இந்நிலையில் தற்போது பரவி வரக் கூடிய அனைத்து வதந்திக்கு ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டுமானால் அத்தனையும் பொய் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து பரப்பாதீர்கள் தற்பொழுது நானும் மருத்துவமனை நிர்வாகமும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கை வெளியிடப் போகிறோம், இவ்வாறு ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் எனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்த சிகிச்சைகளுக்கும். உதவிக்கும் என்றுமே அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என கூறியுள்ளார். நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு சென்று வந்தது போல கூட இல்லை குடும்பத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்தது போல தான் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

33 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago