8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் – சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்பொழுது நிலம் கையகப்படுத்த தடை விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தநிலையில், சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…