Durai Vaiko: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை.. துரை வைகோ அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி மதுரையில் மதிமுக மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, 30 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் ஒரே இயக்கம் மதிமுக. மதிமுகவை உயர்ந்த இடத்துக்கு எடுத்து செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. 20 வயதில் பொதுவாழ்வு பயணத்தை துவங்கிய வைகோவின் பயணம் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்கிறது.

அவரது உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்ல. இறுதி மூச்சுவரை அவரது உயிர் இயக்கத்துக்காக துடித்துக்கொண்டே இருக்கும் என அரசியலில் தனது தந்தை பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கிவிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,  2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் தொண்டர்கள் இடையே நடக்கிறது.

அதாவது, நான் விருதுநகரில், திருச்சியில், பெரம்பலூரில் போட்டியிட வேண்டும் என்று விவாதம் நடைபெறுகிறது.  ஆனால், எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. இயக்கத்துக்கு பக்க பலபமாக இருப்பவர்களை தேர்ந்தெடுங்கள், அவர்களை தேர்தலில் போட்டியிட வையுங்கள் என கட்சி தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு மதிமுக புதிய பொழிவுடன், புதிய உத்வேகத்துடன் செயல்படுகிறது என்ற செய்தியை கேட்க வேண்டும் என்றார். மதிமுக எங்கே இருக்கிறது என்று ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் ஃபீனிக்ஸ் பறவையை போல் மதிமுகவை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ வைப்போம் என்ற சபதத்தை ஏற்போம்.

இந்த இயக்கம் கொடுத்த முதன்மை செயலாளர் பதவி கூட தேவையில்லை. திமுக தொண்டன் என்ற ஒரு அடையாளம் போதும்.  இந்த உன்னதமான அடையாளத்தை விட பெரிதும் இந்த உலகில் வெறும் இல்லை. இந்த இயக்கம் பல்லாயிரக்கணக்கான சகோதர, சகோதிரிகளின் அன்பும் அரவணைப்பும் எனக்கு கொடுத்துள்ளது. இதனை விட உலகில் பெரிது எனக்கு வேறு எதுவும் இல்லை என கண் கலங்கியபடி பேசினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago