இ பாஸ் நடைமுறை தமிழகத்தில் தொடரும் – தலைமை செயலர் சண்முகம்!

Published by
Rebekal

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை மேலும் தொடரும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் உத்தரவு பெற்று அதன் பின் செல்ல வேண்டும் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் முக்கியமான காரணங்களால் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை எனவும், பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு இதனால் வருமானம் குறைவாக உள்ளது எனவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை மேலும் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

9 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

32 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

16 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago