எளிமையான திருமணம்.! ஆன்லைனில் ஆசீர்வதித்த உற்றார் உறவினர்கள்!

Published by
மணிகண்டன்

தஞ்சையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா முன்னெச்செரிக்கையாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மே மாதம் 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் என பலநிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தஞ்சையில் இந்த ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியை வளர்மதி தனது மகள் வெண்பாவுக்கு, புதுச்சேரியை சேர்ந்த சந்திரபாண்டியன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண தேதியும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே  முடிவெடுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு காரணமாக தொழில்நுட்ப உதவியோடு திருமணம் நடத்த முடிவு செய்து அதனை செயல்படுத்தி காண்பித்துவிட்டனர்.

ஜூம் ( ZOOM) செயலியில் காணொலிக்காட்சி வாயிலாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கினார். மற்ற உற்றார் உறவினர்கள் ஜூம் செயலி மூலம் திருமணத்தை கண்டுகளித்தனர். இணைய வாயிலாக ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் வழங்கினர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

20 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago