Tamilnadu CM MK Stalin - ADMK Chief secratary Edappadi Palanisamy [ File Image]
காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவுக்கு மிக குறைவான அளவே, காவேரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவுப்படி உரிய அளவு நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் வாயிலாகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரடியாக சென்றும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக பதிவு செய்துள்ளார்.
அதில், காவேரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழிதேடும் தமிழக முதல்வர் நடவடிக்கைக்கு தனது கடும் கண்டனம் என பதிவு செய்துள்ளார். 2018ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, கர்நாடக அரசு, ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அணுகி, ஆலோசனை கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை கேட்டு பெறவேண்டும். அது முதல்வரின் பொறுப்பாகும். டெல்டா பகுதியில் கருகிக்கொண்டு இருக்கும் நெற்பயிரை காப்பாற்ற வேண்டும்.
காவேரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டெல்டா பகுதி விவசாயிகளை ஒன்றிணைத்து அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…