தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவினர் பேரணி நடத்தி வந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரிடம் மனு அளித்தார் இபிஎஸ்.

சென்னை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. போலி மது, கள்ளச்சாராயம் உயிரிப்பு விவகாரம்,  திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேரணியால், கிண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுகவினர் பேரணி நடந்து வந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.

அப்போது, போலி மது, கள்ளச்சாராய இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தனர். விஷச்சாராயம் அருந்தி அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

15 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

45 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago