தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவுட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணைச்செயலாளராக டி.மணிகண்டனும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக கே.பி.கார்த்திகேயனும், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகரும் மாற்றப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ்பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு ஃபைர்நெட் கழகத்தின் துணை செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…