திருச்சியில் தேர்தல் ரத்து….! வதந்தியை நம்ப வேண்டாம்…! – திருச்சி மாவட்ட ஆட்சியர்

Published by
லீனா

திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.ர் அந்த வகையில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஐந்து காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரிய வந்ததை அடுத்து, அங்குள்ள காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கவர்கள் சிக்கியுள்ளது.

அந்தக் அவர்களில் பதவிக்கு ஏற்ப ரூ 2,000 முதல் 10,000 வரை வைக்கப்பட்டிருந்தது இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கவர்கள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல்கள் ரத்தாகும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முசிறி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அதிகாரபூர்வ தகவல் வந்தால், நாங்கள் மக்களுக்கு என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

10 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

11 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

12 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

12 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

14 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

14 hours ago