சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூரில் அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தாலும் அரசியலில் மாற்றம் இருக்காது என்றும் உட்கட்சி பூசல் என்பது அதிமுகவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா கட்சிகளிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது. பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருச்சியில் முதல்வர் பேட்டியளித்துள்ளார். இதனிடையே, சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி மாதம் வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…