அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ திட்டம் அமைக்கப்படும் என ம.நீ.ம தேர்தல் அறிக்கை.
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டிருந்தார். அதில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து கமல்ஹாசன்தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ராணுவ கேண்டீன் போல, அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ என்ற திட்டம் அமைக்கப்படும். ம.நீ.ம தேர்தல் அறிக்கை தனித்துவமானது, எங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகே, தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000, ரூ.1500 உதவித்தொகை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறார்கள் என்று அறிக்கை வெளியீட்டின்போது திமுக அதிமுகவுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல, நிறைவேற்றக்கூடிய திட்டங்களை தான் வாக்குறுதிகளாக அறிவிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், இலவசங்களை அறிவித்தால் கூடுதல் ஏற்படும். வாசிங்மிஷின் கொடுத்து அதன் பில் மக்கள் தலையிலேயே ஏற்றப்படுகிறது. இல்லத்தரசிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…