வீடுகளில் மின் கணக்கீடு – யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்: தெளிவான விளக்கம்

Published by
Edison

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக மதிப்பிட்டு,அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி,பின்னர் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும் என்றும்,பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்,அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.எனினும்,அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால்,அதற்கேற்ப மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில்,எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,மின்கட்டண விபரம் பின்வருமாறு:

  • 100 யூனிட் வரை- கட்டணம் இல்லை,
  • 110 யூனிட்க்கு – ரூ.35
  • 200 யூனிட்க்கு – ரூ.170
  • 210 யூனிட்க்கு – ரூ.260
  • 290 யூனிட்க்கு  -ரூ.500
  • 390 யூனிட்க்கு-ரூ. 800
  • 500 யூனிட்க்கு-  ரூ.1130
  • 510 யூனிட்க்கு- ரூ.1846
  • 600 யூனிட்க்கு-ரூ.2440
  • 700 யூனிட்க்கு-ரூ.3100
  • 800 யூனிட்க்கு-ரூ.3760
  • 1000 யூனிட்க்கு-ரூ.5080
  • 1200 யூனிட்க்கு-ரூ.6400

என்ற முறையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

TN EB

 

Published by
Edison

Recent Posts

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

25 minutes ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

1 hour ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

4 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

5 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

6 hours ago