Minister Senthil balaji [Image source : Twitter/@Veera284]
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், மருத்துவமனைக்கே நீதிபதி சென்று செந்தில் பாலாஜியை காவலில் வைப்பது குறித்து முடிவு.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி வருகை தந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவலில் வைக்க உத்தரவிடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் நீதிபதி.
செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கப்பிரிவு கோரும் போது, அதற்கு எதிராக வாதாட உள்ள வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ. அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது நிலை உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், மருத்துவமனைக்கே நீதிபதி சென்று செந்தில் பாலாஜியை காவலில் வைப்பது குறித்து முடிவு செய்ய உள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நீதிபதி அல்லி வருகையை அடுத்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்களும் வருகை தந்துள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…