விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவன்!

Published by
Sulai
  • திருப்போருரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
  • மாணவன் தற்கொலை செய்ததற்கு ராகிங் செய்தது தான் காரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.

திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கிஷோர் என்ற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் கடந்த செவ்வாய் கிழமை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவனுக்கு கல்லூரி வளாகத்தில் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் கிஷோரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதற்கு அவர்கள் செவ்வாய் கிழமை கிஷோர் உணவு அருந்தவும் கேன்டீனுக்கு வரவில்லை.இதனால் அவரது நண்பர்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர் ஆனால் எந்த ஒரு பதிலும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.அங்கு கதவை வெகு நேரம் தட்டியும் கிஷோர் எந்த ஒரு பதிலும் கூறவில்லை.இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் விடுதி பொறுப்பாளரை அழைத்து கதவை உடைத்துள்ளனர்.

அப்போது கிஷோர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.பின்னர் கோவில்பட்டியில் உள்ள மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.மாணவனின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago