ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று சேலத்தில் அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர், விரைவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் அதிமுகவில் இணைவார்கள். அப்படி இணையும் போது அதிமுக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார் என்று குறிப்பிட்டார்.
அடுத்து மேகதாது விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , மேகதாது விவகாரத்தில் திமுக மௌனம் சாதித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே.சிவக்குமார் கூறும் கருத்துக்கள் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்றம் கூறியதன் படி காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை ஏற்க வேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகாவில் நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத ஒன்று என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அடுத்ததாக முதல்வர் பற்றி கூறுகையில், முதல்வரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தபோது தவறுகளை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயம் என கேள்வி எழுப்பினார். அடுத்து , எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு ஏதும் தேவையோ, எது நல்லதோ அதனை செய்ய வேண்டும். அதனைத் தான் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கெட்ட நோக்கத்துடன் தமிழக முதல்வர் செயல் பட்டு உள்ளார் என்பது அவரது பேச்சின் மூலம் தெளிவாகிறது என்று முதல்வரின் பேச்சை பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…