டெல்லியில் உள்ள மக்களவை ,மாநிலவை ஆகிய அவையிலும் குளிர்கால கூட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் பேசிய வைகோ , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பவர்கள் அவர்கள் வழக்கில் வழக்கு நிறைவு பெறவில்லை என்றாலும் , தீர்ப்பு தவறு என கருதினாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் .
ஆனால் தென்னிந்திய மக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை காரணம் நெடுந்தூர பயணம் , வழக்கறிஞர்கள் கட்டணம் , பயணத்தில் வீணாகும் செலவு போன்ற காரணங்களால் ஏழை-எளிய அடித்தள மக்கள் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நீதியை பெற முடியவில்லை.
உச்சநீதிமன்றதில் மேல்முறையிடு வழக்குகள் வட இந்தியாவிற்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தான் அதிக வழக்குகள் வருகின்றனர் எனவே உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளையை தென்னிந்தியாவில் நிறுவினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் எளிதாக நீதிமன்றத்தை அணுக முடியும் வழக்கறிஞர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறினார்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21 எல்லோருக்கும் பொது நிதி கிடைத்தது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. 2018 மே 4-ம் தேதி கணக்கின்படி உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை நோக்கி உள்ளன.
எப்படி இத்தனை பிரச்சினைகளை தீர்க்க முடியும்?. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் .அரசியல் சட்டத்தின் 130 வது பிரிவு அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ,யாரையும் கலந்து பேச வேண்டியதில்லை , கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை ,அவர் தாமாகவே முடிவு எடுத்து செயல்படலாம்.
ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் எனவே உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…