ADMK Chief Secretary Edappadi Palanisamy - SP Velumani [File Image]
இன்று கோவையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளச்சி ஜெயராமன் என முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ஒரு கூட்டணிக்குள் இருந்து கொண்டு அந்த கூட்டணி கட்சியையே விமர்சித்து கருத்து கூற கூடாது. அம்மா (ஜெயலலிதா) பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை. அண்ணா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் பற்றி பேச அவசியமா? பேரறிஞர் அண்ணா பற்றி பேசலாமா.?
பெரியார் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுக தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு அரசியல் மாற்றத்திற்குள காரணம் அண்ணா தான். அவர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுவெளியில் தவிர்த்து இருக்க வேண்டும்.
நாங்கள் எப்போதும் கொள்கையில் கூட்டணி (பாஜக – அதிமுக ) வைத்துக்கொண்டது கிடையாது. தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. பாஜக ஆட்சியின் போது தான் காவேரி விவகாரம் தொடர்பாக 23 நாட்கள் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். விவசாயிகளுக்காக இதனை செய்தோம். எங்கள் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) அதற்கடுத்து எடப்படியார் தான். அவர் கிணற்றில் குதிக்க சொன்னால் கூட நாங்கள் குதித்து விடுவோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…