செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது.! அமலாக்கத்துறை குற்றசாட்டு.!

Published by
பாலா கலியமூர்த்தி

செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொர்ணர்வு மனுவுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை பார்த்தபின் முடிவெடுப்பதாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த வகையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வாதத்தில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் கடுமையான ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டியுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்கிறார்.

மற்றொரு பக்கம் நீதிமன்றங்களில் இந்த விவகாரம் நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் எங்களால் எங்களது கடமையை செய்ய முடியவில்லை. செல்வாக்கு மிக்க நபரான செந்தில் பாலாஜியை உடனே விசாரிக்காவிடில் விசாரணை நீர்த்துப்போகும் என்றுள்ளனர்.

விசாரணையை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் வழக்கை நீர்த்துப்போக செய்யும் என வாதம் வைத்தது அமலாக்கத்துறை. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இதன்பின், செந்தில் பாலாஜி வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். இருப்பினும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்ற ஜாமீன் வழங்காத நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை விரைவாக அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதுவும், ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்க வேண்டும் என்று வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டுமா எனவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

20 minutes ago

அங்கன்வாடி மையங்கள் மூடலா? விளக்கம் கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…

1 hour ago

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

1 hour ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

2 hours ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

3 hours ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

3 hours ago