நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம். – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சற்று குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் , சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக ‘கொரோனா தொற்று குறித்த உண்மைகள், அதன் தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் புதுசேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி பேசுகையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மற்ற ஊர்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கிராம பகுதிகளில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும்.
நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம் என அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு மட்டும் 60 வயதிற்கு மேலானோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள், கட்டாய முகக்கவசம், சோப்பு போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி போன்றவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…