தேர்வில் காப்பியடிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மாணவர்களிடம் உதவி பேராசிரியர் ஒருவர் லஞ்சம் கேட்டதன் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முத்தையன் என்கிற உதவி பேராசிரியர் தொலைதூர கல்வித் தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைய தேர்வறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்பதாக மாணவர்களிடம் தெரிவித்த முத்தையன் அதற்கு 5ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஏற்க தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் க்டுப்பாகிய உதவி பேராசிரியர் முத்தையன் மாணவ, மாணவிகளிடம் செக்கிங் என்ற பெயரில் மிகவும் அநாகரீகமாக மாணவிகளிடம் நடந்து கொண்டதாக தேர்வு எழுதிய மாணவ ,மாணவிகள் தரப்பில் இந்த தேர்வுக்கு பொறுப்பாளரை அனுப்பிய சம்பந்தப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணையை நடத்த குழு ஒன்றை அமைத்தார் துணைவேந்தர் அந்த ட குழு அறிக்கை தாக்கல் செய்தது அதில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் சீண்டல் மற்றும் லஞ்சம் ஆகிய செயல்களில் ஈடுபட்ட உதவிப்பேராசிரியர் முத்தையனை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…