நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறிப்பது நெருக்கடியில் நிறுத்தும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் முடிவு செய்யப்பட்டதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மேம்பாட்டு திநிதியும் 2 ஆண்டிற்கு நிறுத்தப்படும் எனவும் அறிவித்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,மக்களின் நல்வாழ்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் பறிப்பது நெருக்கடியில் நிறுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…