கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னக்கள்ளிபட்டி கிராமத்தை சார்ந்தவர் மாகாளி (60). இவரது மனைவி பூவாள் இரண்டு வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.இதனால் மாகாளி தனியாக வசித்து வருகிறார்.இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார்.
சிவராஜ் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.தந்தை மாகாளிக்கும் , சிவராஜிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு குடித்து விட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்ற சிவராஜ் மாகாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது கோபமடைந்த சிவராஜ் தந்தை மாகாளியை அடித்து கொலை செய்து உள்ளார். இதனால் தந்தை உடலை மறைக்க வீட்டில் குழி தோண்டி புதைக்க சிவராஜ் குழி பறித்து உள்ளார்.அருகில் இருந்தவர்கள் மாகாளி வீட்டில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் அவர்கள் அங்கு வந்து உள்ளனர்.
அவர்கள் வந்ததும் சிவராஜ் தப்பி ஓடிவிட்டார்.பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் மாகாளி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஒட்டிய சிவராஜை போலீசார் கைது செய்தனர்.குடும்ப பிரச்சனையால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…