தந்தை-மகன் உயிரிழப்பு.. “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது”- நீதிபதிகள்!

Published by
Surya

கோவில்பட்டி கிளைசிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது” என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையானது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்பொழுது நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு எனவும், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்பொழுது அரசு தரப்பில் மாஜிஸ்திரேட்டிடம் மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தந்தை-மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்ததாகவும், சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணையை தொடங்கும் முன், வழக்குக்கான தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், நீதி கிடைக்கும் என ஜெயராஜின் குடும்பத்தினர் நம்பிவருவதாகவும் அந்த அமர்வில் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கில் ஒரு நொடிகூட வீணாகக் கூடாது எனவும், சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி இந்த வலக்கை விசாரிக்க இயலுமா? என இன்று மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

11 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

13 hours ago