கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்ட மன்னச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு, இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முதல்வரிடம் கண்ணீர் மல்க முறையீடு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த வாரம் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்ட மன்னச்சநல்லூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு, இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றுக் கொண்டிருந்த போது, இடையில் அவர் தொண்டர்களை சந்தித்தார். அப்போது பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் கண்ணீர் மல்க முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…