சுமூக தீர்வு காணுங்க! இல்லையென்றால் தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் – விஜயகாந்த்

Published by
பாலா கலியமூர்த்தி

தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன் என விஜயகாந்த் அறிக்கை.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது 2வது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருக்கும் விளை நிலங்களை அழித்து, அதனை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகளுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நெற்பயிர்களை அழித்து அவசர அவசரமாக விரிவாக்கம் பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டு. நெற்பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி தே.மு.தி.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என என்.எல்.சி நிர்வாகத்தை எச்சரிக்கிறேன் எனவும் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

15 minutes ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

37 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

57 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

2 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

3 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago