Tamilnadu CM MK Stalin - Major General Ignatius Delos Flora [File Image]
கன்னியகுமாரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார்.
இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தாங்கள் பதிவு செய்த டிவீட்டை டெலிட் செய்தனர். இந்த செயலை குறிப்பிட்டு திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் எதற்காக முதலமைச்சர் வாழ்த்து செய்தி பதிவிட்ட டிவீட்டை டெலிட் செய்தீர்கள் என கேள்வி கேட்டு இருந்தார். என்ன நடந்தது எனவும் இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டார்.
இந்நிலையில் இன்று இந்திய ராணுவத்தின் தலைமை பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்து டெலிட் செய்த செய்தியை மீண்டும் பதிவு செய்து கன்னியகுமரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார் என செய்தியை குறிப்பிட்டுள்ளது.
ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பற்றிய செய்திகளை ராணுவ தலைமை தான் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்றும், மாறாக தலைமை தெரிவிக்கும் முன்னர் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்ததால் அந்த டிவீட் டெலிட் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…