சாத்தான்குளம் விவகாரம்.! ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் – மனிதநேய ஜனநாயக கட்சி.!

Published by
Ragi

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான மு. தமிமுன் அன்சாரி , ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் பங்கு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான எம். எல். ஏ. மு. தமிமுன் அன்சாரி கூறியதாவது,

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் துன்புறுத்தி படுகொலை செய்த சம்பவம் இன்றுவரை பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலு‌ம் நம் ஜனநாயக அமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவால் தான் விசாரணைக்கு சென்ற நீதிபதியே அச்சுறுத்திய சம்பவம். இச்சம்பவம் குறித்து தினம் தினம் வரும் தகவல்கள் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தந்தை மகன் படுகொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆஃப் என்ற போலீஸ் அமைப்பும் ஈடுப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளனதாகவும் கூறப்படுகிறது. மேலும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு எதற்காக, எந்த நோக்கத்திற்காக, யாரை கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இச்சம்பவம் மூலம் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீதும் பொது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது மனித உரிமை மீறல்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பும் ஈடுப்பட்டுள்ளதாக கூறுவதால் தமிழக அரசு இதனை குறித்து விளக்கத்தை அளிப்பதோடு, இந்த ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும், இது குறித்து அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

21 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

44 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

58 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago