தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது தவறான செய்தி, அதனை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் அதுவும் குறிப்பாக சென்னை மக்கள் பின்பற்றினால் தொற்று பரவாது. கொரோனா தொற்று சகஜ நிலைக்கு வந்த பிறகு கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் அதனை தொடர்ந்து தான் தமிழக அரசு முடிவு செய்யும்.நோயின் வீரியத்தை மக்கள் புரிந்துக் கொள்ளாதது வேதனை அளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…