6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

Published by
Rebekal

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர்.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய போது, உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் 6 கோடி பணத்தை கொடுத்துவிட்டு கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர் மகனை விடுமாறு கெஞ்சியதுடன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே அந்த கடத்தல் கும்பல் 2 கோடியாக குறைத்து கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாடிய தொழிலதிபர் இது குறித்து கூறியுள்ளார். பின் காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்ல காவல்துறையினரும் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்று பார்த்தால் கடத்தப்பட்ட சிறுவன் காரில் இருந்துள்ளார், கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் உரிமையாளர் யார் என்பதை அறிந்த போலீசார் அவரிடம் விசாரிக்க, தனது நண்பர் தான் காரை வாடகைக்கு வாங்கி சென்றதாக கூறியுள்ளார். யார் அந்த நண்பர் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

42 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago