மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் இல்லை – முதல்வர் பழனிசாமி பேட்டி.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாதடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு சார்பில் 18 மற்றும் தனியார் சார்பில் 6 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 571 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். தற்போது அரசிடம் தேவையான மாஸ்க்குகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளது. கூடுதலாக 2,000 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், நோய் எதிர்ப்புசக்தி மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருக்கின்றது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. இந்த கருவிகள் வரும் 9ம் தேதி வந்த உடனே, கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

இதையயடுத்து கொரோனா தடுப்பு நிதி மத்திய அரசிடம் இருந்து முதல்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என கூறினார். மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கம் இல்லை என்றும் அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வைரஸின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு விரைவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நடமாடும் காய்கறி திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடு மற்றும் மாநாடு சென்று வந்திருந்தால் தாங்களாக முன்வந்து தெரிவிப்பது மிகவும் நல்லது. ஏப்ரல் 14க்கு பிறகு கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து 10ம் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

23 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

57 minutes ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

1 hour ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

2 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago