கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 472ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். ஆகையால், தொற்றில் உயிரிழந்தவர்களின் நலன் கருதி அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் குடுமபத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் தமிழக அரசு, அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…