திண்டுக்கல்லில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்து, குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொம்பையன்பட்டியில் அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் மேடையில் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், ‘பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை.’என குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டாஸ்மாக்கோட பெரிய கொடுமையை போச்சி, எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் பாருங்க! இவருக்குக் கொடுக்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் நமக்குத்தான் வரும். இவர் காசு எங்கேயும் போகாது. அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கு வந்து சேரும். வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, கரும்பு கொடுக்கிறது எல்லாம் அவர் மனைவிக்கு போய்விடும். கரும்பை பாதி விலைக்கு விற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…