தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும் – சசிகலா

Published by
லீனா

தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் துரிதமாக செய்து அதற்குரிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்று சசிகலா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தார்கள், அதாவது, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாகவும், அவை மழையில் நனைந்து ஈரமாகி முளைத்து விட்டதால் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தங்களது வேதனையை தெரிவித்தார்கள்,

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மூன்றரை வட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடந்துவருவதாகவும். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், பல விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்ல முடியாமல் வீடுகள், மாட்டுக் கொட்டகை, களங்கள் உள்ளிட்ட இடங்களில் முட்டைகளாக அடுக்கி வைத்து, தாரப்பாய்களை போட்டு உரிய பாதுகாப்பின்றி மூடி வைத்துள்ளனர். தொடர் மழையால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதால் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் இதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தங்களது வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பல நெல் கொள்முதல் நிலையங்களில் எடுத்த நெல்லை கொண்டு செல்லாமல் அங்கேயே போட்டு வைத்து இருப்பதாகவும் இதன் காரணமாக எடுத்த நெல்லுக்கு தரவேண்டிய பணமும் இன்னும் தங்களது வங்கி கணக்கில் சேரவில்லை. எனவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பண்டிகை காலத்தைக் கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை என்றும் வேதனையை தெரிவித்தனர். எனவே, தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

28 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

58 minutes ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago