கோவை வரும் ஆளுநர்! கருப்பு கொடி காட்டி போராட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் ஆளுநர் நீட் உள்ளிட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது, மக்கள் நலனுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் செயல்படுவது மற்றும் சர்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அரசுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து தமிழக  மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை முன்வைத்து முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதில் ஒரு பகுதியாக கோவைக்கு இன்று வருகை தரும் ஆளுநரை கண்டித்து, சாலையில் முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநர் ரவியே திரும்பி போ என்ற வாசகம் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காததற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

7 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago