திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் உயர்நீதிமன்றத்தில் துரைசாமி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, திருமயம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் எச்.ராஜா முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகியுள்ளார்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…