[Image source : Getty Image]
தமிழகத்தில் நேற்று இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்னும் 2 நாட்களுக்குகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சுற்று குறைந்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழையானது பெய்துள்ளது என்றும் இதன் காரணமாக மாநில முழுவதும் மழைக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
அதே போல 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சிபகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…